சீனாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போலீ மந்திரவாதிகள் கைது
சீனாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போலீ மந்திரவாதிகள் கைது ஜோர்ஜ் டவுன், மே 2 – வயதானவர்களை ஏமாற்றி வந்த போலீ மந்திரவாதிகள் கும்பலை சேர்ந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த ஐந்து வெளிநாட்டு நபர்களும் கோலாலம்பூர் விமான நிலையம் மூலம் சீனாவுக்கு புறப்படுவதற்கு முன் கைது செய்யப்பட்டனர். அந்த சந்தேகப் பேர்வழிகளில் நான்கு பெண்களும் ஒரு ஆடவரும் அடங்குவர் என பினாங்கு துணை போலீஸ் தலைவர் டத்தோ Fizol Salleh தெரிவித்தார். அவர்களிடமிருந்து 5 […]

சீனாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போலீ மந்திரவாதிகள் கைது

ஜோர்ஜ் டவுன், மே 2 – வயதானவர்களை ஏமாற்றி வந்த போலீ மந்திரவாதிகள் கும்பலை சேர்ந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த ஐந்து வெளிநாட்டு நபர்களும் கோலாலம்பூர் விமான நிலையம் மூலம் சீனாவுக்கு புறப்படுவதற்கு முன் கைது செய்யப்பட்டனர். அந்த சந்தேகப் பேர்வழிகளில் நான்கு பெண்களும் ஒரு ஆடவரும் அடங்குவர் என பினாங்கு துணை போலீஸ் தலைவர் டத்தோ Fizol Salleh தெரிவித்தார். அவர்களிடமிருந்து 5 கைத் தொலைபேசிகள் பல்வேறு வகையான நகைகள், 11 கைக்கடிகாரங்கள் , 94,300 சீன யுவான் நாணயமும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கும்பல் கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வந்திருப்தாக Fizol Salleh தெரிவித்தார்.